Monday, November 16, 2009

பட்டினத்தார்
பிறந்தன இறக்கும்,
இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்,
மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்,
சிறுத்தன பேருக்கும்;
உணர்ந்தன மறக்கும்,
மறந்தனவுனரும்;
புணர்ந்தன பிரியும்,
பிரிந்தன புணரும்...

௨)
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்,
திடப்படுமோ? நினருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிளிர் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ? சொக்கனாதனே!

3)
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!

Friday, November 13, 2009

அவள்

வேறென்ன
வேண்டுமெனக்கு?
ஒவ்வொரு
நாளும்
இதே நேரம்
இதே மயக்கம்
ஒவ்வொருவிதமாய்!

காற்றிலே
படபடக்கும்
கண்ணாடிக்கூந்தலோடு
அளவளாவி
மகிழும்
நீலத்தாவணியும்,
கொலுசினிசைக்கேற்ப
நர்த்தனமாடும்
பாவாடைப்பூக்களுமாய்
அவளின்
ஈடில்லா
அழகில்
பொறாமை
கொண்ட
பிறை
நிலவானது
தோல்வி
முகங்காட்டமறுத்து
இருளுக்குள்
புதையுண்டதே
தேய்பிறைக்கு அடுத்து
வரும்
அமாவாசை
ஆகும்...

ஆட்கள் இல்லாத கடற்கரை

ஆட்கள் இல்லாத கடற்கரையில்
யாரோ இருந்துக் கொண்டுதானிருக்கிறார்கள்;

இல்லையெனில்
என் மனதில் ஏன் இத்தனை
இன்ப நினைவுகள் சுரக்கின்றன!

அலைகளை முடிவற்றுப்
பார்த்தபடி அமர்ந்திருக்கின்றேன்;

நீ போன பாதையென

நீ போன பாதையென
ஏதோ ஓர் தடத்தில் ஊர்ந்து செல்கிறேன்..
நீ சாத்திய கதவென்று
ஏதோ ஓர் கதவினைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன்...

என் வழிதனை
நானே உணர்ந்து கொள்கிறேன்,
ஆகாயத்தை பார்த்தபடி
ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றேன் வெற்றிடத்தை;

எப்போதும் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றது
எதிர்பாராத குழப்பங்களும்
சில மறதிகளும்...

உன் அமைதி வேளை

உன் அமைதி வேளை
ஒரு கண்ணாடி சமவெளி;
இலைகள் உதிர்வதில்லை
நீர்த்துளிகள் சொட்டுவதில்லை
காலடிகள் கேட்பதில்லை
ஒரு பறவையும் துயில் கலைவதில்லை;

எந்தக் குறுக்கீடும் நிகழாத
உன் அமைதி வேளை
திடீரென
ஒரு நாள்
என்னை நானே கலைத்துக் கொண்டு
தேம்ப விடுகின்றது!

நான், நிலா, கடல்!

நான்...
நிலா...
கடல்...

"இன்று முதல் நான் தேய்கிறேன்
நேற்றென்னை காண வராததால்" என்றாள் நிலா;

"தாமதம் தவறு தான்,
தவறேன் இன்னியும் நான்" என்றேன்;

"தேவையில்லை நீ
தேடி வராதே,
தேடி வந்து தீனியாய் கொட்டாதே" என்றாள்;

பார்த்திட்டேன் அவளை ஏக்கத்துடன்,
பார்வைக்கு தப்பி ஒளிந்துக் கொண்டால் மேகத்தினூடே;

"அவளை வெளியே இழு
அல்லது என்னை உள்ளே இழு' என்றேன் கடலிடம்.

நிலவுக்கும்
நினைக்கும் இடையே
தூதன் இக்கடலே, அலையாய் வருடி
அவளை அழைத்து வருவான் என்ற ஏக்கத்துடன்
கடல் அலையை ஆவலுடன் கேட்டேன்;

கடல் அலைகளை
நிலவுக்கு அனுப்பியது,
நீர்த்துகள்களை திருப்பி விட்டது மேகம்;
நிலவும் ஒளிந்துக் கொண்டாள்;

வெறும் சப்தத்துடன் எனை நோக்கிய
கடலுக்கு என்ன துயரம் தெரிந்தது,
என் பொருட்டு விண் தொட்டது நீர்த்துளிகள்
மேகத்து நண்பனிடத்தே பணிந்து
அதனினை பணித்து
நிலவினை அடைந்தது தூது;

மேகம் திரையை விளக்கியது,
நிலா, அவளும் என்னை நோக்கினாள்
மன்னித்து விடு,
தேய்ந்திடதே- நீ இல்லாமல்
வாடிடும் இவ்விதயம் என்றேன்;

மேகம் திரையை விளக்க
மதி வெளியே வந்தாள்
என்னுளே நுழைந்தாள்
கடல் ஆர்ப்பரித்தது;

'நான் உனாக்க்காகவே காத்திருக்கிறேன்,
காத்திட வைக்காதே,
காத்திட்டு வைத்துக் கொள் என்னை"
என்றாள் நிலா!!

"உயிருள்ளவரை என்னுள் நீ" என்றேன் நான்.

நான்..
நிலா...
கடல்....

Wednesday, August 19, 2009

ஊழிக்கூத்து

ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

Saturday, July 18, 2009

A Friend

Another Smile;
Another tear;
Another Month,
Another Year;
Another Summer,
Another Spring too,
But i'll never find Another "YOU"

Friday, July 3, 2009

"HELLO" is the word before good-bye!

Wat is the spring time after all?
Only the other side of fall
Oh! If i could have
I would have made you a sunny sky~


"HELLO" is the word before good-bye!


Sometimes it rains, sometimes it shines
Yet the things i want are seldom mine;
How much of summer can we hold
Before we turn and find we are old?
The things mirrors tells us are all lies:



" HELLO" is the word before GOOD-BYE!



Sometimes its dark,
Sometimes its fair
Yet when i go home at night few were there;

Perhaps the next wind that blows in
will bring you back again!
Till then just remembering makes me wanna cry!



"HELLO" is the word before GOOD-BYE!


Sometimes you lose, sometimes you win
Yet i can't forget what might have been
Though i regret for the past!


"HELLO" is the word before GOOD-BYE!

YOU....

She is like a fresh fragrant Rose
Innocence, Freshness
Liveliness to everything
Good-She is so close.....


And she has the most
Enchanting kind of charm in her tiny little face!
She speaks with her eyes
She is beauty and splendor
She is grace
And she blossoms happiness in my life
And love in my heart too!!!


OH! Did i forgot to mention
That this is she is YOU....

A Mirror

"Don't you care for my love?" She asked bitterly,
I handed mirror and said:
"Please address these question to proper person!
Please make all requests to head quarters,
In all matters of emotional importance
Please approach supreme authority directly:"

So i handed her mirror
And she would have broken it over my head
But she caught sight of her own reflection
And that held her spell bound for few seconds
While i fled!

Thursday, July 2, 2009

யாயும் ஞாயும் யாரா கியாரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

- குறுந்தொகை -பாடியவர் : செம்புலப் பெயனீரார்

Saturday, June 20, 2009

நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற சோதிநான்!

- பாரதியின் இந்த வரிகளில் நான் என்னை வலம் வரக் காண்கிறேன்..