நட்பின் பிரிவு
அது ஓர் ஆழமான பிரியம்,
அதுவே ஆன்மாவை நிறைவில் நீராட வைக்கிறது...
நீலக்கடல் கரையில்
அமர்ந்து இருக்கின்ற நேரங்களில்
அலைகள் பாடும் சங்கீதத்தின் வசீகரம்...
நடுநிசியில் வீதியில்
நடக்கையில் மென்மையான காற்றில்
அசைப் போடப்படும் நிமிடங்கள்;
இரவின்
நிலவின்
பூக்களின்
மரங்களின் மௌனம்
எல்லாவற்றையும் விட அழகானது!
நிலா ஒளியாலும்
நட்சத்திர கூட்டத்தாலும் நிரம்பிக் கிடக்கும்
இந்த வானில் - நீயே அதிகம் எனக்கு பிரதிபளிக்கின்றாய்!
கண்களைத் துடைத்துக் கொண்டு
புகைப்படத்தை
நீண்ட நேரம் பார்த்தப் பின்பு
மீண்டும் மீண்டும் புன்னகைத்தேன்...
என் கண்கள்
எப்போதும் எனக்கே உண்மையாக இருக்கவில்லை,
என் மனமோ என்னை பற்றி சிந்திப்பதே இல்லை;
நீயோ,
வந்து விட்டு செல்கிறாய்- ஒரு
நினைவுக்கும் இன்னொரு நினைவுக்கும்
இடையே மனம் ஓடிக் கொண்டே இருக்கின்றது...
உன்
வருகையை எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன்...
நீ சென்றது இந்த இந்த நிமிடம் தான் என்பதை மறந்து...
Sunday, March 7, 2010
Thursday, January 7, 2010
கண்ணீரில் வாழ்கிறேன்
கனவாகிப் போனவளே உனைநினைத்து
கண்ணீரில் வாழ்கிறேன்!
மரணத்தில் உனை மரகலாமென நினைத்தேன்
என்னைக் கொள்ள எனக்குத் துணிவில்லை,
மதுவில் மறக்கலாமென நினைத்தேன்
அது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது!
தூக்கத்தில் மறக்கலாமென நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்த காலங்கள் கனவுகளாய் வருகின்றது!
தோற்றாலும் விரும்பப்படும் உனை மறப்பதெப்படி?
சிலுவைகளை
உன் நினைவுகளை சுமந்துக் கொண்டு
உயிரோடு இறந்துக் கொண்டிருக்கின்றேன்- நான்!
நீ மறந்து போன
ஞாபகம் நான்!
கனவாகிப் போனவளே உனைநினைத்து
கண்ணீரில் வாழ்கிறேன்!
மரணத்தில் உனை மரகலாமென நினைத்தேன்
என்னைக் கொள்ள எனக்குத் துணிவில்லை,
மதுவில் மறக்கலாமென நினைத்தேன்
அது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது!
தூக்கத்தில் மறக்கலாமென நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்த காலங்கள் கனவுகளாய் வருகின்றது!
தோற்றாலும் விரும்பப்படும் உனை மறப்பதெப்படி?
சிலுவைகளை
உன் நினைவுகளை சுமந்துக் கொண்டு
உயிரோடு இறந்துக் கொண்டிருக்கின்றேன்- நான்!
நீ மறந்து போன
ஞாபகம் நான்!
Subscribe to:
Posts (Atom)