Sunday, March 7, 2010

நட்பு

நட்பின் பிரிவு

அது ஓர் ஆழமான பிரியம்,
அதுவே ஆன்மாவை நிறைவில் நீராட வைக்கிறது...

நீலக்கடல் கரையில்
அமர்ந்து இருக்கின்ற நேரங்களில்
அலைகள் பாடும் சங்கீதத்தின் வசீகரம்...

நடுநிசியில் வீதியில்
நடக்கையில் மென்மையான காற்றில்
அசைப் போடப்படும் நிமிடங்கள்;

இரவின்
நிலவின்
பூக்களின்
மரங்களின் மௌனம்
எல்லாவற்றையும் விட அழகானது!

நிலா ஒளியாலும்
நட்சத்திர கூட்டத்தாலும் நிரம்பிக் கிடக்கும்
இந்த வானில் - நீயே அதிகம் எனக்கு பிரதிபளிக்கின்றாய்!


கண்களைத் துடைத்துக் கொண்டு
புகைப்படத்தை
நீண்ட நேரம் பார்த்தப் பின்பு
மீண்டும் மீண்டும் புன்னகைத்தேன்...

என் கண்கள்
எப்போதும் எனக்கே உண்மையாக இருக்கவில்லை,
என் மனமோ என்னை பற்றி சிந்திப்பதே இல்லை;
நீயோ,
வந்து விட்டு செல்கிறாய்- ஒரு
நினைவுக்கும் இன்னொரு நினைவுக்கும்
இடையே மனம் ஓடிக் கொண்டே இருக்கின்றது...

உன்
வருகையை எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன்...
நீ சென்றது இந்த இந்த நிமிடம் தான் என்பதை மறந்து...

No comments:

Post a Comment