என் வீட்டில் நல்ல இருட்டு
எதிர் வீட்டு வெளிச்சத்தில் எழுதுகிறேன் கவிதை
என் வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை
என்கிற கவலையில்லை எனக்கு- எதிர்
வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை
என்கிற கவலையே எனக்கு!
- ஜெயகாந்தன்
************************************
ஒன்றுமில்லை என்கின்றீர்
ஒன்றுமில்லை தானா?
இன்றில்லை என்கின்றீர்
என்றுமில்லை தானா?
********************************************
எதிர் வீட்டுச் சன்னலை
எவரோ திறக்க
என் வீட்டில் வெளிச்சம் !
No comments:
Post a Comment