Thursday, July 9, 2020

பாதசாரி கவிதைகள்




வழியில்
ஒன்று மட்டும் புரிகிறது
புறப்படாமலேயே போய்க் கொண்டிருக்கிறேன்.



**************************************************



வெள்ளையை விளக்குவதற்கு
கருப்பு தேவைப்படுகிறது...


***********************************************


தடாகத்தில் தாமரை மலர்கள்
தாகமாய் விழுங்கியது
சூரியனை!



***********************************************


இரை தேட
சென்றிருந்த ஒருபொழுதில்
கலையப்பட்டு இருந்தது அதன் வீடு,
அமைதியில் பயங்கரமான
கூக்குரல் அலறிற்று



***************************************************


வரிகளின் வலியும்
வேதனையும் வடித்தவனுக்கே;
விலைப்பேசிக் கொண்டிருந்தார்கள்
தரகர்கள்!


*********************************************


ஊரை விட்டு அகலும் பயணத்தில்
ஊரை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது
மனதின் பயணம்!!

திருமேனி கவிதைகள்




பூ பூத்தப்பின் தான்
காம்புக்கு வருகிறது பேர்.



**************************************


உன்னைப் பார்த்த
ஜன்னலை
தினமும் பார்க்கிறேன்
ஜன்னல்
அங்கேயே இருக்கிறது



***************************************


சொட்டச் சொட்ட
போய்க்கொண்டிருந்தாள்
மழையை பார்க்கவில்லை
நான்
அப்போது நல்ல மழை





என் வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை


என் வீட்டில் நல்ல இருட்டு
எதிர் வீட்டு வெளிச்சத்தில் எழுதுகிறேன் கவிதை
என் வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை
என்கிற கவலையில்லை எனக்கு- எதிர்
வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை
என்கிற கவலையே எனக்கு!
- ஜெயகாந்தன்


************************************

ஒன்றுமில்லை என்கின்றீர்

ஒன்றுமில்லை தானா?
இன்றில்லை என்கின்றீர்
என்றுமில்லை தானா?

********************************************


எதிர் வீட்டுச் சன்னலை
எவரோ திறக்க
என் வீட்டில் வெளிச்சம் !