Thursday, July 9, 2020

திருமேனி கவிதைகள்




பூ பூத்தப்பின் தான்
காம்புக்கு வருகிறது பேர்.



**************************************


உன்னைப் பார்த்த
ஜன்னலை
தினமும் பார்க்கிறேன்
ஜன்னல்
அங்கேயே இருக்கிறது



***************************************


சொட்டச் சொட்ட
போய்க்கொண்டிருந்தாள்
மழையை பார்க்கவில்லை
நான்
அப்போது நல்ல மழை





No comments:

Post a Comment