Thursday, July 9, 2020

பாதசாரி கவிதைகள்




வழியில்
ஒன்று மட்டும் புரிகிறது
புறப்படாமலேயே போய்க் கொண்டிருக்கிறேன்.



**************************************************



வெள்ளையை விளக்குவதற்கு
கருப்பு தேவைப்படுகிறது...


***********************************************


தடாகத்தில் தாமரை மலர்கள்
தாகமாய் விழுங்கியது
சூரியனை!



***********************************************


இரை தேட
சென்றிருந்த ஒருபொழுதில்
கலையப்பட்டு இருந்தது அதன் வீடு,
அமைதியில் பயங்கரமான
கூக்குரல் அலறிற்று



***************************************************


வரிகளின் வலியும்
வேதனையும் வடித்தவனுக்கே;
விலைப்பேசிக் கொண்டிருந்தார்கள்
தரகர்கள்!


*********************************************


ஊரை விட்டு அகலும் பயணத்தில்
ஊரை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது
மனதின் பயணம்!!

No comments:

Post a Comment