உன் அமைதி வேளை
ஒரு கண்ணாடி சமவெளி;
இலைகள் உதிர்வதில்லை
நீர்த்துளிகள் சொட்டுவதில்லை
காலடிகள் கேட்பதில்லை
ஒரு பறவையும் துயில் கலைவதில்லை;
எந்தக் குறுக்கீடும் நிகழாத
உன் அமைதி வேளை
திடீரென
ஒரு நாள்
என்னை நானே கலைத்துக் கொண்டு
தேம்ப விடுகின்றது!
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment