Friday, November 13, 2009

அவள்

வேறென்ன
வேண்டுமெனக்கு?
ஒவ்வொரு
நாளும்
இதே நேரம்
இதே மயக்கம்
ஒவ்வொருவிதமாய்!

காற்றிலே
படபடக்கும்
கண்ணாடிக்கூந்தலோடு
அளவளாவி
மகிழும்
நீலத்தாவணியும்,
கொலுசினிசைக்கேற்ப
நர்த்தனமாடும்
பாவாடைப்பூக்களுமாய்
அவளின்
ஈடில்லா
அழகில்
பொறாமை
கொண்ட
பிறை
நிலவானது
தோல்வி
முகங்காட்டமறுத்து
இருளுக்குள்
புதையுண்டதே
தேய்பிறைக்கு அடுத்து
வரும்
அமாவாசை
ஆகும்...

No comments:

Post a Comment