நீ போன பாதையென
ஏதோ ஓர் தடத்தில் ஊர்ந்து செல்கிறேன்..
நீ சாத்திய கதவென்று
ஏதோ ஓர் கதவினைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன்...
என் வழிதனை
நானே உணர்ந்து கொள்கிறேன்,
ஆகாயத்தை பார்த்தபடி
ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றேன் வெற்றிடத்தை;
எப்போதும் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றது
எதிர்பாராத குழப்பங்களும்
சில மறதிகளும்...
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment